Share

Saturday, January 31, 2015

பட்டதாரிகளுக்கு உதவியாளர் பணி

ஜார்கண்ட் மாநில அரசில் காலியாக உள்ள 114 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜார்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ஜார்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC)

காலியிடங்கள்: 114

தேர்வு:Assistant Competitive Examination – 2014

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

1. Assistant (Jharkhand Secretariat Service) - 104

2. Assistant (Jharkhand Public Service Commission) - 10

வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வுகளின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. SC,ST பிரிவினருக்கு ரூ.125.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2015

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  www.jssc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய கிழக்கு கடற்படையில் பல்வேறு பணி

இந்திய கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள 219 தீ அணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர், தொலைபேசி ஆபரேட்டர், நர்ஸ் & உணவக கண்காணிப்பாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 219

பணி மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை:

1. Cook - 14

2. Civilian Motor Driver - 91

3. Barbar (MTS) - 14

4. Dhobi - 14

5. Bootmaker/ Equipment - 14

6. Tailor - 14

7. Fire Engine Driver - 02

8. Fireman Grade-II - 53

9. Telephone Operator Grade-II - 01

10. Nurse/ Civilian Sister - 01

தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு பத்தாம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

11. Hostel Superintendent - 01

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Flag Officer Commanding-in-Chief (for CRC),

Headquaters, Eastern Naval Command,

Arjun Block, 2nd Foor, Naval Base,

Visakhaptnam – 530014 (Andhra Pradesh)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.02.2015

தொலை பகுதிகளிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 06.03.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://eastern naval command visakhapatnam recruitment 2015 - application form என்ற இணையதளத்தை பார்க்கவும்

2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் -TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் என்று அதன் பொறுப்புத் தலைவர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மாவட்ட கல்வித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள் குரூப் 1,2,4 பிரிவுகளில், தேர்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 417 துணை வேளாண் அலுவலர் பணியிடங்கள்

தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 417 துணை வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417

பணி: Assistant Agricultural Officer (துணை வேளாண் அலுவலர்)

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் வேளாண் துறையில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு: இரண்டு தாள் கொண்டது.
முதல் தாளில்: வேளாண்மை பட்டயம் தரத்தில் 200 வினாக்கள் கொண்டது. 300 மதிப்பெண்கள் கொண்டது.
இரண்டாம் தாளில்: General Studies (HSC தரத்தில்) 100 வினாக்கள், 200 வினாக்கள் கொண்டது.

சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2800.

தேர்வு கட்டணம்:

1. இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.150.

2. இட ஓதுக்கீடு பிரிவினருக்கு ரூ.50

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்லவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2015

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2015

தாள் - I: காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

தாள் - II: மாலை 2:30 மணி முதல் - 04:30 மணி வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/1_2015_not_eng_asst_agrl_Officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, January 28, 2015

இந்திய மாணவர்களுக்கான ஐ.இ.எல்.டி.எஸ். எண்ணிக்கை உயர்வு!

IELTS விருதுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதைத் தொடர்ந்து, இந்திய மாணவர்களுக்கான IELTS விருதுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்திய மாணவர்களுக்கு, ஆண்டிற்கு மொத்தம் 8 IELTS விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

IELTS விருதுகள், பிரிட்டிஷ் கவுன்சிலால், தெற்காசிய மாணவர்களுக்காக, அவர்களின் ஆங்கில மொழித்திறனை சோதித்து, அதன் பொருட்டு வழங்கப்படுபவை. ஆனால் இதுவரை அந்த விருதுகள், நேபாளம் மற்றும் பூடான் நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. ஆனால், புதிய அறிவிப்பின்படி, அந்நாட்டு மாணவர்களும் இனிமேல், IELTS விருதுகளைப் பெற்று, வெளிநாடுகளுக்கு (குறிப்பாக, ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு) கல்வி கற்க செல்லலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் ஒரு IELTS விருதின் மதிப்பு, இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் ஆகும். இதன்மூலம், இந்த விருதைப் பெற்று வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் ஒரு இந்திய மாணவர், பட்டப் படிப்பிற்கான கட்டணத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த IELTS விருதை, உலகம் முழுவதும், 9000க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
விரிவான தகவல்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/awards

இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனப் பணிகள்

உத்திரப் பிரதேச மாநிலம் இசாட்நகரிலுள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில், மொத்தம் 103 பணி வாய்ப்புகள் உள்ளன. Skilled Support Staff என்பது அந்தப் பணியின் பெயர்.

இப்பணி வாய்ப்புகள் தற்காலிகமானவை. எதிர்காலத்தில் நிரந்தரமாகும் வாய்ப்புகள் உண்டு. இடஒதுக்கீடு அடிப்படையில், பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுவரை. அதேசமயம், அதிகபட்ச வயதுவரம்பில் சலுகையும் உண்டு.

விண்ணப்பதாரர்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. முடித்திருக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100.

விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசித் தேதி - பிப்ரவரி 23.

அனைத்துவிதமான தகவல்களுக்கும் http://ivri.nic.in/

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலையில் சேர...

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில், பல்வேறு பிரிவுகளில், பி.டெக். மற்றும் பி.ஆர்க். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

2015ம் கல்வியாண்டிற்கான படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

BSAUEEE 2015 என்று சுருக்கமாக அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், ஈரோடு, நாகர்கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது. தமிழகம் தவிர, இதர மாநிலங்களிலும், நுழைவுத்தேர்வு மையங்கள் உண்டு.

விண்ணப்பக் கட்டணம் - ரூ.600.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - ஏப்ரல் 10.

நுழைவுத்தேர்வு நடக்கும் தேதி - ஏப்ரல் 18.

விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.bsauniv.ac.in

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

சென்னை: குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.

பொதுவாக, 14 வயது வரையிலான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த தடை உள்ளது. ஆனால், தடையை மீறியும் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர் இருந்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டம் உள்ளிட்ட, அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், 29,656 பேராக குறைந்து விட்டது என தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால், 2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களின் படி, தமிழகத்தில் 1.51 லட்சம் முழு நேர தொழிலாளர்; 1.32 லட்சம் பகுதி நேர தொழிலாளர் என, 2.83 லட்சம் குழந்தை தொழிலாளர் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, குழந்தை தொழிலாளர் தடுப்பு பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் தீவிர வேட்டை நடத்த, தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர் நல ஆய்வாளர்கள், மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் உதவி மையத்திற்கு வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள்

புதுடில்லி: புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.

மேலும், அனுமதி பெறாமல், கல்வி நிறுவனங்கள் இயங்கக்கூடாது என, வலியுறுத்தி உள்ளது. புதிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., இடையே, பனிப்போர் நிலவி வருகிறது.

கடந்த ஆண்டு, இப்பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு வர, மேற்கூறிய பொறுப்புகளை, ஏ.ஐ.சி.டி.இ., கண்காணிக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவு அடிப்படையில், இந்த ஆண்டில், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்கவும், ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களில், இடமாற்றம், கூடுதல் படிப்புகள் துவக்குவது போன்றவற்றில், கல்வி நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை, ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய கல்வி நிறுவனங்கள் துவக்க, பின்பற்ற வேண்டிய விதிகள் அடங்கிய கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், கல்வி நிறுவனங்கள் துவக்க தேவையான இட வசதி, கட்டண விகிதம், ஆசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதிகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்களில், பின்பற்ற வேண்டியவை குறித்து கூறப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி பெறாமல், எந்த தொழில்நுட்பமும், மேலாண்மை, பொறியியல் கல்வி நிறுவனமும் இயங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி உள்ளது.

ஒரு லட்சம் சீட் காலி!

ஆண்டுதோறும், புதிய கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது போல், கல்லூரிகளை மூடவும் அனுமதி கேட்கப்படுவதாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கக தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், ஆண்டுக்கு 1 லட்சம் பொறியியல் இடங்களும், ஆயிரக்கணக்கான பாலிடெக்னிக் இடங்களும் காலியாக உள்ளன.

தமிழக தொழில்நுட்ப கல்லூரிகள் வகை எண்ணிக்கை

அரசு - 61
அரசு உதவி  - 70
பல்கலை கீழ்  -  15
தனியார்  -  1,593

குறையும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்

ஏ.ஐ.சி.டி.இ.,யின் கையேட்டில் உள்ள தகவல்படி, பாலிடெக்னிக் கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம், மேலாண்மை கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வகை   -  2013   -  2014

பாலிடெக்னிக்

அரசு   -  40  -   41
அரசு உதவி  -  34  -   34
தனியார்   -  412  -  417

முதுநிலை மேலாண்மை பட்டயம்

அனைத்து வகை  -  20  -  19

எம்.பி.ஏ., கல்லூரிகள்

அனைத்து வகை  -  395  -   372 

Tuesday, January 27, 2015

பிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி!

 பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்களை, செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மார்ச்சில்...

பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு மாணவருக்கான, 2014 - 15ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. பொதுத்தேர்வு மாணவருக்கான செய்முறை தேர்வு (பிராக்டிக்கல்) நடத்தப்படும். பிளஸ் 2 மாணவருக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவைக்கு செய்முறை தேர்வு நடத்தப்படும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறை தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை செய்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வருக்கு, மொத்தமுள்ள 200 மதிப்பெண்ணில், 150 மதிப்பெண் எழுத்து தேர்வாகவும், 50 மதிப்பெண் செய்முறை தேர்வாகவும் இருக்கும். அதில், செய்முறை தேர்வில் மட்டும், 30 மதிப்பெண் புறமதிப்பீட்டுக்கும், 20 மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும் பிரித்து, மொத்தம், 50 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அக மற்றும் புறமதிப்பீடு மதிப்பெண் சேர்த்து, 50க்கு, 40 மதிப்பெண் எடுத்தால்தான், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படும். அவ்வாறு, 40 மதிப்பெண் செய்முறை தேர்வில் பெறாத மாணவர், செய்முறையில் தேர்ச்சி அடையாதவராகவே கருதப்படுவார். அவர் எழுத்துத்தேர்வில், 150க்கு 150 மதிப்பெண் பெற்றாலும், சம்பந்தப்பட்ட பாடத்தில் தேர்ச்சி அடையாதவராகவே அறிவிக்கப்படுவார்.

அதனால், செய்முறை தேர்வு என்பது முக்கியம். மேலும் 150 மதிப்பெண்ணுக்கான எழுத்துத் தேர்வில், 30 மதிப்பெண் எடுத்தாலே, செய்முறை தேர்வில் எடுத்த, குறைந்தபட்ச 40 மதிப்பெண் சேர்ந்து, மொத்தம் 70 மதிப்பெண்ணாக கணக்கிடப்பட்டு, தேர்ச்சியடைந்து விடலாம். செய்முறை தேர்வில், பெரும்பாலும் மாணவரின் நன்னடத்தை, வருகைப் பதிவு, செய்முறை தேர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண் வழங்கப்படுகிறது.

பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளி கள், செய்முறை தேர்வில் முழு மதிப்பெண் வழங்கி, பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்கின்றன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள், வருகைப்பதிவு மற்றும் ஓரளவு செய்முறை தேர்வை எதிர்கொண்டாலே, அவரை, பாஸ் (தேர்ச்சி) செய்துவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு மாதங்கள்...

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள், 75 சதவீத வருகைப்பதிவை பூர்த்தி செய்திருந்தால், செய்முறை தேர்வில், 50க்கு, 40 மதிப்பெண் வழங்கி, பாஸ் மார்க் போடப்படும். கடைசி இரண்டு மாதங்கள், முறையாக பள்ளிக்கு வந்து, பயிற்சி தேர்வுகளை எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்கப்படும். இருந்தாலும், செய்முறைத்தேர்வில், மாணவர் தனது பங்களிப்பை முறையாக செய்திருக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை: பி.எட். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் திங்கள்கிழமை (ஜூன் 9) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2015 ஆம் ஆண்டுக்கான பி.எட். படிப்பிற்கு விண்ணப்பங்கள் ஜூன் 9 ஆம் தேதி ( திங்கள்கிழமை) மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ் வழி படிப்பிற்கு 500 இடங்கள், ஆங்கில வழி படிப்பிற்கு 500 இடங்கள் என மொத்தம் 1,000 இடங்கள் உள்ளன.

விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி சென்னை, எஸ்.டி. இந்து கல்லூரி நாகர்கோவில், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வேலூர், மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி விழுப்புரம் ஆகியவற்றில் விநியோகம் செய்யப்படுகின்றன.

மேலும், மண்டல மையங்களான, எஸ்.என்.ஆர். கல்லூரி கோவை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மதுரை, வருவான் வடிவேலன் பி.எட். கல்லூரி தருமபுரி, ஷிவானி பொறியியல் கல்லூரி திருச்சி, புனித கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி சென்னை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி கோவை, இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி தஞ்சாவூர், கிரசன்ட் கல்வியியல் கல்லூரி திருவண்ணாமலை, கஸ்தூரிபா காந்தி கல்வியியல் கல்லூரி மசக்காளிபட்டி, ராசிபுரம் கல்வியியல் கல்லூரி ராசிபுரம், கபி கல்வியியல் கல்லூரி மதுரை, பவானி கல்வியியல் கல்லூரி கடலூர் ஆகிய கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக ரூ. 500 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பல்கலைக்கழகத்தின் இணையதளமான www.tnou.ac.in/ இல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ரூ. 500 க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். தபால் மூலம் விண்ணப்பத்தை பெற, ரூ.550 க்கான வரைவோலையை "தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை 15' என்ற பெயரில் சென்னையில் மாற்றத் தக்கதாக எடுத்து, "பதிவாளர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600015' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் முதல் தொடங்கும். பின்னர் பி.எட். வகுப்புகள் 2015 ஜனவரியில் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04424306657 மற்றும் 04424306658 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தரமான கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்: ரோசய்யா

பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார்.

கோவை அருகேயுள்ள கருமத்தம்பட்டி கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளி விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்துகொண்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு தலைமை தாங்கினார். கோயமுத்தூர் கேந்திரா பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.கொங்கு வேளாளர் அறக்கட்டளைத் தலைவர் ஆர்.பொன்னுசாமி, செயலாளர் ஆர்.சின்னசாமி, பொருளாளர் எஸ்.கே.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.கலைவாணன் வரவேற்றார். பள்ளியின் முதல்வரும் கோவை மெட்ரிக் பள்ளிகளில் சிறந்த முதல்வர் விருதைப் பெற்றவருமான வசந்தி பால்ராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

தமிழக ஆளுநர் ரோசய்யா விழாவில் பேசியது: கோவை மாநகர் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. ஜி.டி.நாயுடு, என்.மகாலிங்கம், பி.ஆர். ராமகிருஷ்ணன் போன்றோர் இம்மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளனர். விவசாயம், கல்வி, தொழில் ஆகியவற்றில் கோவை மாவட்டம் பெரு வளர்ச்சியடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம்.

1990-களில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து மாணவர்களின் கல்வி வேட்கையைத் தீர்க்க வேண்டும். பள்ளிகள் தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும். கல்வியோடு மட்டுமல்லாது மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து நாட்டின் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டுமென்றார்.

பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், சிறந்த பள்ளி என்பது மதிப்பெண் அதிகம் வாங்கும் பள்ளியன்று. சமுதாயத்திற்கு சிறந்த மாணவர்களை வழங்குவதாகும் என்றார். மேலும், மாணவர்களுக்கு உபயோகமான கல்வி முறையை அரசு வகுக்க வேண்டும். அதுவே வலிமையான பாரதத்தை அமைக்க உதவும் என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு பேசுகையில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், கணினி மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதைவிட புத்தகத்தைப் படிக்கும் பழக்கத்தின் மூலம் சிறந்த அறிவாற்றலையும் ஞாபக சக்தியையும் பெறலாம் என்றார்.

பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி எம்.திவ்யபிரபா நன்றி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு "சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி'

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு காவல் அதிகாரி பயிற்சி அளிக்க அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் படி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளில் ஒரு வகுப்பிற்கு 2 அல்லது 3 பேர் வீதம் 70 ஆயிரம் மாணவிகள் தேர்வுச் செய்யப்பட்டு, அவர்களுக்கு "சக்தி வாய்ந்த தேவதைகள்' எனும் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்பட்டு, சிறப்பு காவல் அதிகாரி என்ற பதவியும், அதற்கான அடையாள அட்டையும் வழங்கப்படும். 

மேலும், மாணவிகள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், மற்றவர்களுக்கு எப்படி உதவுவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Monday, January 26, 2015

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் அறிவிப்பு மத்திய அரசில் பல்வேறு பணிகள்

கொல்கத்தா மண்ட லத்தில் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி விவரம் வருமாறு:

1. பொது சுரங்க பாதுகாப்பு இயக்குனரகத்தில் டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

இயற்பியல்/ கணிதம்/ புள்ளியியல்/ ஆபரேஷனல் ரிசர்ச்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 ஆண்டு முன் அனுபவம்.

2. மத்திய நுகர்வோர் துறையின் கீழ் உள்ள தேசிய பரிசோதனை மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: (பிசிக்கல் - சிவில்):

5 இடங்கள். (பொது - 4, ஒபிசி - 1).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

பயன்பாட்டு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி/ கெமிக்கல்/ சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., மற்றும் பரிசோதனை மையத்தில் சிவில் இன்ஜினியரிங் மெட்டீரியலை ஆய்வு செய்வதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

3. தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர்:

2 இடங்கள் (பொது).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி:

விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களில் பி.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

4. தேசிய வரைபடம் அமைப்பில் ஜூனியர் புவியியல் உதவியாளர்:

1 இடம் (பொது).

வயது:

18 முதல் 25க்குள்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி:

புவியியல்/ புள்ளியியல்/ கணிதம் ஆகிய பாடங்களில் ஹானர்ஸ் பட்டம்.

5. மத்திய மருந்து பரிசோதனை மையத்தில் சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்:

2 இடங்கள் (பொது).

வயது:

18 முதல் 30க்குள்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி:

பாக்டீரியாலஜி அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் அல்லது மருந்தியல் அல்லது உடல் இயக்கவியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம்.

தேர்வு கட்டணம்:

ரூ.50. இதை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத் தினர், பெண்கள் ஆகியோர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.)

வயது வரம்பு 27.1.2015 தேதியின்படி கணக்கிடப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sscer.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 27.1.2015.

Saturday, January 24, 2015

கயிறு வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான கயிறு வாரியத்தில் (COIR BOARD) அப்ரண்டிஸ் சட்டம் 1961ன் படி அளிக்கப்பட உள்ள பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டிஸ் பயிற்சி

காலியிடங்கள்: 07

கல்வித்தகுதி: Computer Operator's Programming Assistant பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒரு வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.9,600 உதவிதொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary, Coir Board, Coir House, MG Road, Kochi - 16

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.coirboard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பத்தாம் வகுப்பு தகுதிக்கு இந்திய விமானப்படையில் "ஈஸ்டர்ன் கமாண்ட்"

இந்திய விமானப்படையில் "ஈஸ்டர்ன் கமாண்ட்" எனும் கிழக்குப் பிரிவின் தலைமைக் கிளையில் காலியாக உள்ள தட்டச்சர், கிளார்க், குக், மெஸ் ஸ்டாஃப், சஃபைவாலா போன்ற 85 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 85

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பணிகளுக்கேற்ப பத்தாவது, +2, பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மின்சாரத் துறையில் பொறியாளர் பணி

மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் (என்எச்பிசி) மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பயிற்சி பொறியாளர்

காலியிடங்கள்: 87

கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட எல்க்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் அண்ட் ஹை வோல்டேஜ், பவர் எஞ்சினியரியங் போன்ற துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

 சென்னை, ஜன. 23: தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தலைமைச் செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 6-இல் அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் வருகிற 28-இல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து  விண்ணப்பதாரர்களுக்கும் இத்தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, January 22, 2015

ஜன. 27 முதல் வி.ஏ.ஓ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

’கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான வி.ஏ.ஓ., எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது; டிசம்பரில், முடிவுகள் வெளியானது.  

இதில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன., 27 முதல் பிப்., 12ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின், தரவரிசை அடங்கிய பட்டியல் www.tnpsc.gov.in இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பு, விரைவு அஞ்சல் மூலம், தனியாக அனுப்பப்பட்டு உள்ளது. அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என உறுதி கூற இயலாது.

விண்ணப்பதாரர் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால், மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Wednesday, January 21, 2015

படிப்பறிவு பெற்றவர்களால் மட்டுமே ஜனநாயகம் காப்பாற்றப்படும்.-விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன்


படிப்பறிவு பெற்றவர்களால் மட்டுமே ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே, நமது எதிர்காலம் வளமாக இருக்க இளைஞர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்பிப்பது அவசியம் என, வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

சென்னை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நூலக உலகம் மாத இதழ், உத்தம நாயகன் நூல்கள் வெளியீட்டு விழாவில் தலைமை வகித்து அவர் ஆற்றிய உரை:

படிப்பு என்றாலே பேரறிஞர் அண்ணாதான் நினைவுக்கு வருவார். மருத்துவமனையில் இருந்தபோதும் அவர் புத்தகம் படிக்க அறுவைச் சிகிச்சையைக் கூட தள்ளிவைக்கக் கோரியவர்.

தற்போது படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. மக்களவை உறுப்பினராக இருந்தபோது அங்குள்ள நூலகத்துக்குச் செல்வேன். அப்போது குறைந்த உறுப்பினர்களே படிக்க வருவார்கள்.

மக்கள் பிரதிநிதிகளே படிப்பு ஆர்வமம் இல்லாமல் இருப்பது நம் நாட்டில்தான். ஆகவே படிக்கும் பழக்கத்தை மக்களிடம் பத்திரிகைகள் ஏற்படுத்த வேண்டும்.

பத்திரிகைகள் படித்தாலே பொதுவான விஷயங்கள் தெரியும். ஆனால் முக்கியப் பொறுப்புகளில் இருப்போர் கூட பத்திரிகைகளைப் படிக்காதது வருத்தமளிக்கிறது. ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது பத்திரிகைகளின் கடமையாகும்.   ஊழல் தடுப்புக்கான சட்டம் அண்டை மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது குறித்து மக்களிடையே பத்திரிகைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆனால், ஜனநாயகத் தேர்தலில் கூட மக்களையே ஊழலுக்கு உள்ளாக்கும் போக்கே உள்ளது.

நமது நாடு நல்ல நாடு. நமது இளைஞர்களே நாட்டின் வருங்கால வளமாவர். அவர்களுக்கு நல்ல கல்வி, ஒழுக்கத்தை கற்றுத் தந்தால் நாடு மேம்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இதழ்களை வெளியிட்டு மாநில முன்னாள் அரசுச் செயலர் ஏ.எம்.சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ரா.முத்துகுமாரசாமி, பிரிட்டிஷ் கவுன்சில் நூலக முன்னாள் தலைமை இயக்குநர் பி.ஜெயராஜன், கொல்கத்தா தேசிய நூலக முதன்மை இயக்குநர் பி.ஒய்.ராஜேந்திரகுமார், பி.சேடார்க், சாகித்ய அகாதெமி பொறுப்பு அலுவலர் அ.சு.இளங்கோவன், நூலக உலகம் ஆசிரியர் ஆவுடையப்பன், பின்னலூர் மு.விவேகானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு



மத்திய அரசின் கொல்கத்தா மண்டலத்தின் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப் பி' மற்றும் குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் வெளியிட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: பொது சுரங்க பாதுகாப்பு இயக்குனரகத்தில் டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட் - 01
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: இயற்பியல், கணிதம், புள்ளியியல், ஆபரேஷனல் ரிசர்ச், கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் முதுகலை டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மத்திய நுகர்வோர் துறையின் கீழ் உள்ள தேசிய பரிசோதனை மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: (பிசிக்கல் - சிவில்) - 05
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பயன்பாட்டு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி, கெமிக்கல், சிவில் பி.இ., மற்றும் பரிசோதனை மையத்தில் சிவில் இன்ஜினியரிங் மெட்டீரியலை ஆய்வு செய்வதில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தொற்றுநோய் தடுப்பு ஆய்வாளர் - 02
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல்துறைகளில் பி.எஸ்சி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம்.

பணி: தேசிய வரைபடம் அமைப்பில் ஜூனியர் புவியியல் உதவியாளர் - 01
வயது வரம்பு: 27.1.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: புவியியல், புள்ளியியல், கணிதம் போன்ற துறைகளில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மத்திய மருந்து பரிசோதனை மையத்தில் சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட் - 02
வயது வரம்பு:  27.1.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பாக்டீரியாலஜி அல்லது நுண்ணுயிரியல் அல்லது உயிரி வேதியியல் அல்லது மருந்தியல் அல்லது உடல் இயக்கவியல் அல்லது வேதியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். (எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sscer.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

புதுதில்லி அரசில் 1223 பல்வேறு பணி

புதுதில்லி அரசு மற்றும் அதன் கீழ் செயல்பட்டும் துறைகளில் காலியாக உள்ள 1223 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர்
காலியிடங்கள்: 12

பணி: நூலகர்
காலியிடங்கள்: 03

பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 04

பணி: உதவி இன்ஜினியர் (சிவில்)
காலியிடங்கள்: 03

பணி: பார்மசிஸ்ட்
காலியிடங்கள்: 11

பணி: ஸ்டாப் நர்ஸ்
காலியிடங்கள்: 02

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03

பணி: பீல்டு அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 07

பணி: ஷிப் மாடலிங் இன்ஸ்ட்ரக்டர்
காலியிடங்கள்: 01

பணி: ஷிப் மாடலிங் ஸ்டோர்கீப்பர்
காலியிடங்கள்: 02

பணி: ஸ்விம்மிங் கோச்
காலியிடங்கள்: 07

பணி: ஸ்விம்மிங் லைப் கார்டு
காலியிடங்கள்: 07

பணி: நூலகர்
காலியிடங்கள்: 09

பணி: இசை ஆசிரியை
காலியிடங்கள்: 62

பணி: ஓவிய ஆசிரியை
காலியிடங்கள்: 202

பணி: அறிவியல் ஆசிரியர்
காலியிடங்கள்: 117

பணி: உடற்கல்வி ஆசிரியர்
காலியிடங்கள்: 424

பணி: ஸ்டெனோகிராபர் (நிலை - 3)
காலியிடங்கள்: 47

பணி: சூப்பர்வைசர்கள் (நிலை - 2)
காலியங்கள்: 290

பணி: மேலாளர் (சிவில்)
காலியிடங்கள்: 01

பணி: துணை மேலாளர் (டிராபிக்)
காலியிடங்கள்: 01

பணி: மேலாளர் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 01

பணி: துணை கண்காணிப்பு அதிகாரி
காலியிடங்கள்: 01

பணி: துணை பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்கள்: 01

பணி: தொழிலாளர் நலத்துறை அதிகாரி
காலியிடங்கள்: 02

பணி: சீனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள் 01

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2015.

பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய

http://dsssbonline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

புதுக்கோட்டையில் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு குறித்து 21 நாள் பயிற்சி

புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு குறித்து 21 நாள் பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து நிலையத்தின் நிறுவன இயக்குநர் சுரேஷ் புதன்கிழமை
வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் நடைபெறும் ஆடை வடிவமைப்பு பயிற்சியில் புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த 18 முதல் 35
வயதுக்குள்பட்ட படித்த ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுடையோர் 3 புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன், செல்லிடப்பேசி எண் குறிப்பிட்டு பிப். 2-ம் தேதிக்குள் நிலைய இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாயப்பு நிலையம், 1506-2 மேல 4-ம் வீதி புதுக்கோட்டை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் 9994737185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.

ரவி விண்ணப்பித்தார். அதற்கு துறை பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில்

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள், இரண்டு, உண்டு, உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில், 64,400 மாணவர்; 63,566 மாணவியர்; 31,594 உண்டு, உறைவிட பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில், 1,831 இடைநிலை ஆசிரியர்; 2,014 பட்டதாரி ஆசிரியர்; 671 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேலும், 475 இடைநிலை ஆசிரியர்; 96 பட்டதாரி ஆசிரியர்; 45 சிறப்பு ஆசிரியர் என, மொத்தம் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில், 829 ஆதிதிராவிடர் நல விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள் செயல்படுகின்றன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. படிகட்டில் பயணம் செய்வதால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு, தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வழி காட்டுதல் நெறிமுறைகள் உயர் கல்வித்துறை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் இலவச பஸ்-பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் வேறு எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் எழுத்தர், பாதுகாவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

     இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக, மாவட்ட மேலாளரால் மேற்குறிப்பிட்ட பணிகாலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான பதிவு மூப்பு விவரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 1.7.2014 அன்றைய நாளில் ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் ஆகியோர் 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், பொது பிரிவினர் 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

     பாதுகாவலர் பணியிடம்: இப்பணிக்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான பதிவு மூப்பு கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையோர் மட்டும் ஆதிதிராவிடர்-9.6.2006, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-11.9.2013, பிற்பட்ட வகுப்பினர்-21.3.2013 வரையும். முன்னுரிமையற்றவர்கள் ஆதிதிராவிடர்-30.12.1991, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-12.7.1995, பிற்பட்ட வகுப்பினர்-26.12.1995 வரையும் இருக்க வேண்டும்.


      உதவியாளர் பணியிடம்: இப்பணியிடத்திற்கு பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியிறுதி வகுப்புக்கு மேல், மேல்நிலை தேர்ச்சி பெற்று பதிவு செய்திருந்தால் வயது வரம்பு சலுகை உண்டு. கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையோர் மட்டும். ஆதிதிராவிடர் அருந்ததியினர்-26.8.2009,  ஆதிதிராவிடர்-4.6.1996, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-21.6.2005, பிற்பட்ட வகுப்பினர்-29.6.1998 வரையும். முன்னுரியற்றவர்கள் ஆதிதிராவிடர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு-24.6.1982 வரையிலும் பதிவு செய்திருக்க வேண்டும்.

     எழுத்தர் பணியிடம்: இப்பணிக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளியிறுதி வகுப்புக்கு மேல், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பதிவு செய்திருந்தால் வயது வரம்பில் சலுகை உண்டு. கலப்பு திருமணம் புரிந்த முன்னுரிமையுடையவர்கள் மட்டும், ஆதிதிராவிடர் அருந்ததியினர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு 24.7.2007, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-10.10.2007, பிற்பட்ட வகுப்பினர்-26.7.2013 வரையும். முன்னிரிமையற்றவர்கள் ஆதிதிராவிடர்-30.6.1989, மிகவும் பிற்பட்ட வகுப்பினர்-19.4.1989, பிற்பட்ட வகுப்பினர்-10.9.1987 வரையிலும் இருக்க வேண்டும்.

     எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச் சான்றுகளுடன் வரும் 23-ம் தேதி சூலக்கரையில் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து பதிவு மூப்பு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கை எக்காரணம் கொண்டு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, January 20, 2015

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள்

காஞ்சிபுரம்: எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற, மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.

அனிமேஷன் பாடங்கள்

காலை மற்றும் மாலை வேளையில் கூடுதல் வகுப்புகள், திருப்புதல் தேர்வுகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என, அனைத்து வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், எத்தனை புதிய செயல்பாடுகள், முயற்சியும் செய்தாலும், அரசுப் பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சி என்பது, பெரும்பாலும், அரிதாகவே காணப்படுகிறது.

தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. இதனை மாற்றிக் காட்ட, நடப்பு கல்வியாண்டில், புதிய கல்வி செயல் திட்டத்தை மாநில கல்வித் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, பாடங்கள் அடங்கிய, டிவிடி தயார் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

இதற்காக, பாடங்கள் முழுவதும் அனிமேஷன் முறையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த, அனிமேஷன் பாடங்களுடன், தேர்வில் தேர்ச்சிபெறும் யுக்திகள் அடங்கிய டிவிடிகள் தயாரிக்கப்பட்டன. இந்த டிவிடிகள் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் கடந்த வாரம் வழங்கப்பட்டது.

டிவிடி வினியோகம்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு மட்டும் இந்த, டிவிடியை மாநில கல்வித் துறை வழங்கியதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிரத்யேக பாட வகுப்புகள் அடங்கிய, டிவிடியை காஞ்சிபுரம் மாவட்ட கல்வித் துறையே தயார் செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு, அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு, வீடியோ பதிவுகள் அடங்கிய டிவிடிகள் தயாரித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்துக் காட்ட மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2013-14ம் கல்வியாண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி 87.9 சதவீதம். இது முந்தைய 2012-13ம் கல்வியாண்டை காட்டிலும், 3.2 சதவீதம் அதிகம். ஆனால், மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களையும் தனியார் பள்ளிகளே பெற்றன.

100 தேர்ச்சி வருமா?

ஒரு அரசு பள்ளி மாணவர் கூட, எந்த பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை. எந்த ஒரு அரசுப் பள்ளியும் நுாறு சதவீத தேர்ச்சியை பெறவில்லை. இந்த குறைபாடுகளை களையவே, நடப்பாண்டில் புதிய கல்வி முறையை மாவட்ட கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், "மாநில கல்வித்துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி.,க்கும்; மாவட்ட கல்வித்துறை சார்பில், பிளஸ் 2விற்கும் வழங்கப்பட்ட டிவிடிகள் இரண்டுமே பிரத்யேகமானவை. பிளஸ் 2 வகுப்பிற்காக கடந்த பல மாதங்களாக சிரமப்பட்டு, இந்த டிவிடியை தயார் செய்துள்ளோம். இந்த டிவிடி மூலம் பல்வேறு வகுப்புகள் நடத்தப்பட்டு, நுாறு சதவீத தேர்ச்சியடைய முயற்சிப்போம்" என்றார்.

நவீன வளர்ச்சிக்கேற்ப மாற்றியமைக்கப்படும பாலிடெக்னிக் பாடத்திட்டம்

 பாலிடெக்னிக் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ற பாடத் திட்டத்தை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மாற்றியமைத்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழக பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பாலிடெக்னிக் பாடத் திட்டத்தில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மாற்றம் செய்து வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

புதிய பாடத்திட்ட குழுவின் கன்வீனர் பேராசிரியர் வைரம் கூறியதாவது: பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில், இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த இரு பேராசிரியர்கள், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என, எட்டு பேர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது.

மெக்கானிக்கல், புரடக்ஷன், ரெப்ரிஜரேஷன் அண்ட் ஏர் கண்டிஷனிங் ஆகிய பாடங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படுகிறது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டிலிருந்தும், இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வரும் 2016 - 17ம் கல்வியாண்டிலிருந்தும், புதிய பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு, வைரம் கூறினார்.

Monday, January 19, 2015

சென்னையில் நாளை வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ஜனவரி 21-ஆம் தேதி காலை 10 மணி அளவில் இந்தக் கண்காட்சி, கருத்தரங்கம் தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்தி: இந்தக் கண்காட்சியில், இளைஞர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சுய தொழில் குறித்த வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்படும். இதுமட்டுமல்லாது தொழில் நெறி சொற்பொழிவாற்றுதல், வேலையளிப்பவர்களிடம் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. கருத்தரங்கில் பல்துறை வல்லுநர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

கணக்கு பண்ணுங்க...

பல்வேறு போட்டித் தேர்வுகளின் போது இரண்டு மற்றும் மூன்றிலக்க எண்களில் வர்க்கங்கள் கேள்வியாக கேட்கப்படுகின்றன. அவற்றில் 1 ஆல் முடியும் இரண்டிலக்க (21, 51, 81...) எண்களுக்கு அவற்றின் வர்க்கங்கள் காணும் எளிய முறைகளும் உள்ளன.

====> வர்க்கம் காண வேண்டிய எண்ணை முதலில் 10 ஆல் வகுபடக்கூடிய எண்ணாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக 71 என்ற எண்ணை வர்க்கப்படுத்த அதிலிருந்து 1 ஐ கழித்து, 70 ஆக மாற்றிக் கொள்ள வேண்டும்.

71 - 1 = 70

====> பின்னர் நாம் ஏற்கனவே அறிந்துள்ள, 10ன் மடங்கு எண்களை வர்க்கப்படுத்தும் எளிய முறை மூலம், அந்த எண்ணை வர்க்கப்படுத்த வேண்டும்.

விடையாக கிடைத்த 70 ஐ வர்க்கப்படுத்த,

70 ஜ் 70 = 4900

====> தற்போது, வர்க்கப்படுத்த வேண்டிய எண்ணையும், 10ன் மடங்காக மாற்றப்பட்ட எண்ணையும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

வர்க்கப்படுத்த வேண்டிய எண் 71 ஐ அதனை முழு எண்ணாக மாற்ற வந்த 70 உடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.

71 + 70 = 141

====> இறுதியாக தற்போது வந்த கூட்டுத்தொகையை, ஏற்கனவே கண்டுபிடித்துள்ள 10ன் மடங்கு எண்ணின் வர்க்கத்துடன் கூட்டிக்கொள்ள இறுதி விடை கிடைத்து விடுகிறது.

===> 4900
141 +
------
5041
------
ஃ 71 ஜ் 71 = 5041
இப்போது மற்றுமொரு உதாரணமாக எண் 41 ஐ எடுத்துக்கொள்வோம்,
41 ===> 41 - 1 = 40,
40 ஜ் 40 = 1600,
41 + 40 = 81,
1600 + 81 = 1681 ===> ஃ 41 ஜ் 41 = 1681....

பிளஸ் 2 தகுதிக்கு முப்படைகளில் 375 அதிகாரி பணிகள்

தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானம், கப்பற்படைகளில் அதிகாரிகள் பணிக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி தேர்வை நடத்துகிறது. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 135வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியில் 97வது 10 + 2 கோர்ஸ் பயிற்சிகள் 2.1.2016ல் ஆரம்பமாக உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 375.

இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 320 இடங்களும் (ராணுவம் - 208, கப்பற்படை - 42, விமானப்படை - 70). இந்திய நேவல் அகாடமி (பிளஸ் 2 என்ட்ரி ஸ்கீம்) - 55.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 2.7.1996க்கு முன்போ அல்லது 1.7.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

1. தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு:

பிளஸ் 2 தேர்ச்சி.

2. தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10+2 (Cadet Entry Scheme) பிரிவிற்கு:

இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

ரூ.100. (எஸ்சி., எஸ்டியினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது). இதை இணையதளத்திலிருந்து செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா/ ஸ்டேட் பாங்க் ஆப் பைகானிர் மற்றும் ஜெய்ப்பூர்/ ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்/ ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்/ ஸ்டேட் பாஙக் ஆப் பாட்டியாலா/ ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏதேனும் ஒரு கிளையில் நெட் பேங்கிங் முறை மூலம் செலுத்தலாம். இரண்டு கட்டங்களாக 3 முதல் 4 நாட்கள் தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வு சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், மதுரை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.1.2015.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 800 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) அகில இந்திய அளவில் 800 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டிற்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்:

25 (பொது - 10, எஸ்சி - 5, ஒபிசி - 10).

வயது வரம்பு:

19.1.2015 அன்று 18 லிருந்து 23க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

உடற்தகுதி:

உயரம் 170 செ.மீ.,
மார்பளவு: குறைந்த பட்சம் 80 செ.மீ., (5 செ.மீ., விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.)
தூரப்பார்வை கண்ணாடி அணியாமல் குறைந்தது 6/6 மற்றும் 6/9 என்ற அளவில் சிறந்த பார்வைத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

உடல் அளவுகள் அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. 'Assistant Commandant/DDO CISF,Southzone' என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http:www.cisf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DIG, CISF (South Zone),
Rajaji Bhawan, “D“ Block,
Besant Nagar,
CHENNAI 600090.
Tamilnadu.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 27.1.2015.

இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

என்சிசி சான்றிதழ் அவசியம்

என்சிசி சிறப்பு நுழைவு திட்டத்தின் கீழ் அக்டோபர் 2015 குறுகிய கால கமிஷனின் 38வது கோர்சில் சேர (எஸ்எஸ்சி தொழில்நுட்பம் அல்லாத) என்சிசி 'சி' சான்றிதழ் பெற்ற திருமணமான/ ஆகாத ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:

என்சிசி - ஆண்கள்:

50. இதில் 45 இடங்கள் பொது பிரிவுக்கும், 5 இடங்கள் போரில் காயமடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

என்சிசி பெண்கள்:

4. இதில் 10 சதவீத இடங்கள் போரில் காயமடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

19 லிருந்து 25க்குள். (அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1990க்கு முன் மற்றும் 1.7.1996க்குப் பின் பிறந்திருக்கக் கூடாது.)

தகுதி:

50 சதவீத தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் மற்றும் என்சிசி சீனியர் டிவிசனில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் சேவையாற்றி என்சிசி 'சி' சான்றிதழுக்கான தேர்வில் 'பி' கிரேடு அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும். போரில் வீர மரணம் அடைந்த/ காயமடைந்த/ மாயமான வீரர்களின் வாரிசுகளுக்கு 'சி' சான்றிதழ் கட்டாயமல்ல.

உடற்தகுதிகள்:

ஆண்கள் - 157.5 செ.மீ.,
பெண்கள் - 152 செ.மீ.,
கண் பார்வை: 6/6, 6/18.
எடை: ஆண்கள் வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கான எடை: 42 கிலோ.
உரசும் முட்டுகள், தட்டையான பாதங்கள் இல்லாமல், காதுகள் சாதாரணமாக கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எந்த ஒரு நோயும் இல்லாமல் நல்ல உடல் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு கட்டமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு குழுத் தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். 5 நாட்கள் நடைபெறும் 2ம் கட்டத்தேர்வில் மருத்துவத்தேர்வும் நடத்தப்படும். அதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இறுதியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னி அகாடமியில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ராணுவத்தில் லெப்டினென்ட் அந்தஸ்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சம்பளம்:

ரூ.15,600 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. பயிற்சியின் போது ரூ.21 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அருகிலுள்ள எந்த ஓசி என்சிசி யூனிட்டிலிருந்து என்சிசி 'சி' சான்றிதழ் பெற்றார்களோ அந்த யூனிட்டிற்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அருகிலுள்ள ஓசி, என்சிசி யூனிட்டிற்கு கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 27.1.2015.

போரில் வீரமரணம் அடைந்த/ காயமடைந்த/ மாயமான/ வீரர்களின் வாரிசுகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.2.2015க்கு முன் அனுப்ப வேண்டிய முகவரி:

Dte.Gen.of Recruiting/Rtg.A. NCC Entry,
AG's Branch, IHW of MOD (Army),
West BlockIII,
R.K. Puram,
NEWDELHI 110066.

நூலகர் பயிற்சியாளர்பணிக்கு

நூலகர் பயிற்சியாளர்பணிக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2014-15-ஆம் கல்வியாண்டுக்கான நூலகர் பயிற்சியாளர் பணிக்கு(கண்க்ஷழ்ஹழ்ண்ஹய் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங் பழ்ஹண்ய்ங்ங்ள்) பெங்களூரு பல்கலைக்கழகம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்வாகும் நபர்கள் பெங்களூரு பல்கலைக்கழக நூலகங்களில் ஓராண்டுக்கு பயிற்சியாளராக பணியாற்றலாம். கர்நாடக பல்கலைக்கழகங்களில் முதுநுலை நூலகர் பட்டம்(எம்.லிப்)அல்லது தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் நூலக அறிவியல் பட்டயம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பத்தில் பெயர், பிறந்ததேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி ஆகியவிவரங்களுடன் பதிவாளர், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி, பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 2013-14-ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பயிற்சிபெற்றோர் மீண்டும் விண்ணப்பிக்கஇயலாது. பயிற்சிகாலத்தில் எம்.லிப்.பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7 ஆயிரம், பட்டயர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஜன.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, January 18, 2015

ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்துகொள்ள விருப்பமா?

சேலம்: வரும் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ, இரண்டாண்டு படிப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இத்தேர்வில் தேர்ச்சி பெற தவறி, வரும் 2015, ஜூன் மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், கலந்துகொள்ள விரும்புபவர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

அதில், கூறப்பட்டுள்ள தகுதி மற்றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை, கண்டிப்பாக இணைந்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக, சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம், போட்டோ எடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதால், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே, போட்டோவுடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உத்தமசோழபுரத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ஜனவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி. தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?

* ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். அணியும் ஆடைகளில் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு.

* நமது நடை சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விடுவார்கள். வேகமாக நடப்பது என்பது நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

* எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்கள் தொங்கியபடியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது, தலையை தொங்கப்போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்து பேசுவது போன்றவை தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் குணங்கள்.

* எந்த விஷயத்தையும் பாசிட்டிவ் ஆக அணுக வேண்டும். தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளர்களின் பேச்சை கேட்கலாம் அல்லது புத்தகம் படிக்கலாம். கண்ணாடி முன் நின்று "என்னால் முடியும்" என பேசுவதும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

* வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை பட்டியலிடுங்கள். இதன்மூலம் நமக்கு வந்த வாய்ப்புகள், தன்னம்பிக்கை அளிக்கும் சம்பவங்களை தெரிந்து கொள்ள லாம்.

* என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணம் அறவே இருக்கக்கூடாது. இதிலிருந்து விடுபட மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.

* பள்ளி, கல்லூரி, கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புகிறீர்களா?. அப்படியெனில் தன்னம்பிக்கை குறைவு என அர்த்தம். இனிமேல் எங்கு சென்றாலும், முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். இதனால் பயம் போய்விடும். தன்னம்பிக்கை கூடும்.

* நண்பர்களுடன் இருக்கும்போது, மனதில் பட்டதை தைரியமாக பேசுங்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நினைக்க வேண்டாம்.

* உடற்பயிற்சி செய்து உடலை சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உயர்கல்விக்கான ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்து அதிர்ச்சியளித்த மத்திய அரசு

புதுடில்லி: நடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.

அதாவது, 3,900 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு கல்வி ஆண்டில், நிரந்தர கட்டடங்களுக்கு இடம்மாறும் திட்டத்தில் உள்ள, எட்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.ஐ.டி.,) பாதிக்கும். அவை, இறுதிக் கட்ட பணிகளுக்கான நிதியை பெற முடியாத நிலை ஏற்படும் என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில், 16 ஐ.ஐ.டி.,க்களுக்கு, 2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் தற்போது, 163 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு 2,337 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த எட்டு ஐ.ஐ.டி.,க்களில், ஜோத்பூர், ரோபர் உட்பட இரண்டு நிறுவனங்களை தவிர்த்து, இதர ஆறு நிறுவனங்களை வரும் ஜூலைக்குள் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றும் திட்டம், முந்தைய ஐ.மு., ஆட்சியில், 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், ஐந்து ஐ.ஐ.டி., மற்றும் ஐந்து ஐ.ஐ.எம்.,களுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது தற்போது, 65 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்துடன், திறந்தநிலை ஆன்லைன் கல்வி திட்டத்திற்கான ஒதுக்கீடு, 100 கோடியில் இருந்து 5 கோடியாகவும், மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 100 கோடியில் இருந்து, 15 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் மேலாக, ராஷ்டிரிய உச்சா சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், நாட்டில் உயர் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 2,200 கோடி, மறுமதிப்பீட்டில், 397 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

நிதி குறைப்பு ஏன்?

சமீபத்தில், இளநிலை ஆய்வு கல்விக்கான உதவித்தொகை, 16 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதுபோல், முதுநிலை ஆய்வு கல்விக்கான உதவித்தொகை, 18 ஆயிரத்தில் இருந்து, 28 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இதன்மூலம், ஐ.ஐ.டி.,களுக்கு கூடுதலாக 150 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதையொட்டி, பல்வேறு துறைகளின் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

TKS

DINAMALAR

Thursday, January 15, 2015

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு

மன்னார்குடி, : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட களப்பகுதிகளில் பணியாற்ற சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களுக்குட்பட்ட 5 களப்பகுதிகளுக்கு தலா 4 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
 இவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் போன்ற சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், வங்கிகளுக்கும் இடையே தொடர்பாளராக செயல்பட வேண்டும். இப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மன்னார்குடி மற்றும் முத்துபேட்டை வட்டாரங்களுக்குட்பட்ட களப்பகுதிகளில் குடியிருப்பதுடன் சுயஉதவிக்குழு அல்லது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பில் உறுப்பினராகவும், விண்ணப்பிக்கும் நாளன்று 35 வயதிற்கு கீழ் உள்ளவராகவும், மக்கள் நிலை ஆய்வாளர் கண்டறியப்பட்ட உறுப்பினராகவும், 12ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொடர்பு திறன் மற்றும் கணினி இயக்க போதுமான முன்அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாத மதிப்பூதியமாக ரூ. 2 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். உரிய தகுதி சான்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுவோர்க்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04366-221031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்கள்

இயற்கையோடு இயைந்து இயற்கையை நேசிக்கும் வாழ்வு நம்முடையது. அப்படிப்பட்டவர்களுக்கே இயற்கையைப் பாதுகாக்கும் பணி வழங்கப்பட்டால்? அப்படியொரு வாய்ப்பைத்தான் வழங்குகிறது, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (Tamilnadu Forest Uniformed Services Recruitment Comimittee). தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் வனக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள வனவர்/ கள உதவியாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டித்தேர்வுகள் நடத்தி, தகுதியானவர்களைத் தேர்வு செய்யவிருக் கிறது இந்த கமிட்டி!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்தத் தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.

வேலைகளின் விவரம்...

1. துறை: தமிழ்நாடு வனத்துறை

பணி:

வனவர் (ஃபாரஸ்டர்)

காலியிடங்கள்:

148

சம்பளம்:

மாதம் ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.4,400

2. துறை: தமிழ்நாடு வனத்துறை தோட்டக் கழகம்

பணி:

வனவர் (ஃபாரஸ்டர்)

காலியிடங்கள்:

17

சம்பளம்:

மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400

3. துறை: அரசு ரப்பர் கழகம்

பணி:

கள உதவியாளர் (ஃபீல்டு அசிஸ்டென்ட்)

காலியிடங்கள்:

16

சம்பளம்:

மாதம் ரூ.9,300-34,800 + தர ஊதியம் ரூ.4,200

கல்வித் தகுதி:

விவசாயம், கால்நடை பராமரிப்பு, தாவரவியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சுழல் அறிவியல், வனவியல், நிலயியல், தோட்டக்கலை, இயற்பியல், புள்ளியியல், கால்நடை அறிவியல், வன உயிரியல், விலங்கியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, பர்சனாலிட்டி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவினருக்கு 30. SC, ST, BC, MBC பிரிவினருக்கு 35.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.1.2015.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.2.2015.

தேர்வு மையங்கள்:

சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.60/-

தேர்வுக் கட்டணம்:

ரூ.262/-

விண்ணப்பிக்கும் முறை:

வனவர்/ கள உதவியாளர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.60/-ஐ (விண்ணப்பப் படிவக் கட்டணம் ரூ.50/- மற்றும் சேவைக் கட்டணம் ரூ.10/-) குறிப்பிட்ட தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் செலுத்தி விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டைப் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.250/-ம், சேவைக் கட்டணம் ரூ.12/-ம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அஞ்சலகங்களில் ஏதேனும் ஓர் அஞ்சலகத்தில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டு விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த ளிவிஸி விண்ணப்பத்தை சரியான அளவுள்ள காகித உறையில் வைத்து, பின் அதை சரியான கிளாத் லைன்டு உறைக்குள் வைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக

 The Chief Postmaster, Anna Road H.O, Chennai  600 002 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதனுடன் சான்றிதழ்கள் / நகல்கள் எதையும் அனுப்பத் தேவையில்லை. விண்ணப்பங்களை அனுப்ப கடைசித் தேதி, 30.1.2015.

மேலும் விவரங்களுக்கு: www.forests.tn.nic.in.

Wednesday, January 14, 2015

Institute for Financial Management and Research (IFMR)

Application are invited for PGDM Program at IFMR

Eligibility: Graduates in any discipline

Important Dates: Last date : 31stJan'2015

For more details: http://ifmr.ac.in/

Admission for MBA 2015 at IIT Madras

Applications are invited for MBA Programmes at Indian Institute of Technology Madras

Eligibility: Graduates in any discipline from a recognised University (or professional qualifications equivalent to that of a university degree as recognized by the UGC) with a first class or 60% and above in their qualifying examination.All applicants should have a valid CAT Score
Important Dates: Last date of application On or before 31stJan'15

For more details http://www.doms.iitm.ac.in/admission/

நிர்வாக திறமையை மேம்படுத்தும் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் பணி

ஒரு நிறுவனத்தின் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட் பணி. திட்டமிடுதல் மற்றும் முறைப்படுத்தல், வாங்குதல் அமைப்புகள் மற்றும் நடைமுறை, தரப்படுத்தல் மூலமாக பல்வேறான குறைப்பு நடவடிக்கைகள், தேவை மற்றும் விநியோகத்தில் நிலவும் நிச்சயமின்மைகளை குறைத்தல், கையாளுதல் மற்றும் போக்குவரத்து, ஆய்வு செய்தல், முறையாக இருப்பு வைத்தல் மற்றும் உள்நிறுவன தேவைகளுக்கு பொருட்களை வழங்குதல், விவரப் பட்டியலை நிர்வகித்தல், விற்பனை மேலாண்மை மற்றும் உடைந்த அல்லது சேதமடைந்தப் பொருட்களை நீக்குதல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இப்பிரிவில் அடங்கும்.

* இன்றைய பொருளாதாரத்தில் மெட்டீரியல் மேலாண்மை:

நிறுவனங்களுக்கு இடையே இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிலவும் போட்டி, செலவினங்களைக் குறைத்தல் போன்ற அம்சங்களால் மெட்டீரியல் மேலாண்மைத் துறையானது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில், முதலாளித்துவப் பொருளாதாரம் கடந்த 1991ம் ஆண்டில் நுழைவதற்கு முன்பாக, ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை அதிகளவில் வாங்கி, பெரியளவிலான இடத்தில் அதை சேமித்து வைத்து, பணத்தையும், இடத்தையும் முடக்க வேண்டியதில்லை. ஆனால் இன்று ஒரு நிறுவனம் மேற்கூறிய 2 விஷயங்களையும் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில், அதிகப் போட்டியால் நிலைமை மாறிவிட்டது.

* இத்துறைக்கான மனிதவளத் தேவை:

பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், இப்பணிக்கானஆட்கள் தேவை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல், பார்மசூடிகல், எப்எம்சிஜி பாதுகாப்பு, ரயில்வே, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட எப்போதும் உதிரிபாகங்கள் தேவைப்படும் அனைத்து துறைகளிலும், வாங்குதல், இருப்பு வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளில் மெட்டீரியல் மேலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

மெட்டீரியல் மேலாண்மையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு தேவை மற்றும் விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக, பார்மா நிறுவனத்தில், மருந்துகள், வெப்பநிலை கட்டுப்பாட்டு அறையில், தொடர் கண்காணிப்பில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயில்வே துறையை எடுத்துக் கொண்டால், வைப்பு அறைகள் பொறியாளர்களால் மேலாண்மை செய்யப்படும்.

* மெட்டீரியல் மேலாண்மை படிப்பு:

இத்துறை தொடர்பான பலவித சங்கேத குறிப்புகள் இளைய தலைமுறையினர் மத்தியில் உள்ளன. இத்துறையில், பட்ட டிப்ளமோ முதுநிலை டிப்ளமோ முழு அளவிலான எம்.பி.ஏ ஆகிய படிப்புகள் உள்ளன. இத்துறையில் எம்.பி.ஏ அல்லது முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐஐஎம்எம் (இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்) வழங்கும் முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளை பகுதி நேரப்படிப்பாகவோ அல்லது தொலை நிலைப்படிப்பாகவோ மேற்கொள்ளலாம்.

* இந்த தொழிலுக்குள் நுழைதல்:

ஒவ்வொரு நிறுவனமும், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் துறைக்கான ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் தனியான விருப்பங்களைக் கொண்டிருக்கும். சில நிறுவனங்கள், தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் அல்லாத மெட்டீரியல் மேலாண்மை செயல்பாட்டை நன்றாக மேற்கொள்ளும் பொறியியல் பட்டதாரிகளை நியமித்துக் கொள்கின்றன.

அதேசமயம், இந்த இருவகை செயல்பாடுகளையும் திறம்பட மேற்கொள்ளும் தொழில் நுட்பம் சாராத பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களில் பணிகளைப் பெறுகின்றனர். இத்துறையில் ஒருவர் ஆரம்ப நிலையில், மெட்டீரியல் மேலாண்மையில் பயிற்சி பெறுபவராக, பயிற்சி பெறும் எக்ஸ்சிகியூடிவ், பொருள் வாங்குதல் அதிகாரி, மெட்டீரியல் மேலாளர் மற்றும் வைப்பறை அதிகாரி போன்ற பணி நிலைகளில் நியமிக்கப்படுகிறார்.

ஒரு மெட்டீரியல் மேலாளர் தனது நிறுவனம் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்திருப்பதோடு, முழு சந்தை நிலவரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெட்டீரியல் மேலாளர்கள் என்போர் ஒரு நிறுவனத்தின் சக்தி மையங்களுள் ஒன்றாக இருப்பவர்கள். ஒரு பெரிய நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உதிரிபாகங்கள் வாங்கப்படும்.

* வணிக வியூகங்கள்:

சில இளம் மெட்டீரியல் மேலாளர்கள், தங்களின் பணியானது பொருட்களை வாங்குதல் மற்றும் அவற்றை இருப்பு வைக்கும் நிலையத்தை நிர்வகித்தல் என்ற அளவில் மட்டுமே நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், முழு சந்தை நிலவரத்தை திறம்பட அறிந்து கொள்வதும் அவரின் பணியாகும். சந்தையில் ஒரு சரியான வியாபாரியை கண்டுபிடிக்கவும், சந்தையை முறையாக ஆய்வு செய்யவும் அவர் சிறந்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பான வழங்கல், பொருட்களின் தரம் மற்றும் சரியான நேரத்தில் பொருட்களை வழங்கும் திறன் போன்றவை ஒரு வியாபாரியை தேர்ந்தெடுப்பதில் முக்கியமானவை.

மிக அதிகளவிலான பொருட்களை இருப்பு வைத்தலும் தேவையற்றது. அதே சமயம், உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பொருட்கள் வழங்குவதில் எந்தவித தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது. நிறுவனம் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தமான திறன்களுடன், சிறந்த திட்டமிடுநராகவும், வியூக ரீதியில் முடிவெடுப்பவராகவும், நல்ல குழு தலைவராகவும் ஒரு மெட்டீரியல் மேலாளர் திகழ்வது அவசியம். எனவே, இந்தப்பணியானது ஒரு சவால் நிறைந்த பணி என்று

டெல்லி சபார்டினேட் சர்வீசஸில் வேலை! 1223 பேருக்கு வாய்ப்பு!

டி.எஸ்.எஸ்.பி. என்று சொல்லப்படும் டெல்லி சபார்டினேட் சர்வீசஸ் செலக்ஷன் போர்டின் மூலமாக உடற்பயிற்சி ஆசிரியர், சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ற கல்வித் தகுதிகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் விவரம்:

அசிஸ்டென்ட் ஸ்டோர் கீப்பர்        12
லைப்ரேரியன்            3
டெக்னீஷியன்            4
அசிஸ்டென்ட் என்சினியர்(சிவில்)        3
ஃபார்மசிஸ்ட்            11
ஸ்டாஃப் நர்ஸ் கிரேட் பி        2
டெக்னிக்கல் அசிஸ்டென்ட்        3
ஃபீல்ட் அசிஸ்டென்ட்        7
ஷிப் மாடலிங் இன்ஸ்ட்ரக்டர் (ஆண்)    1
ஷிப் மாடலிங் ஸ்டோர்கீப்பர் (ஆண்)    2
நீச்சல் பயிற்சியாளர்        7
ஸ்விம்மிங் லைஃப் கார்ட்        7
லைப்ரரியன்
(உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒதுக்கீடு)    9
மியூசிக் டீச்சர்            62
ஓவிய ஆசிரியர்            202
அறிவியல் ஆசிரியர்        117
உடற்பயிற்சி ஆசிரியர்        424
சுருக்கெழுத்தாளர்            47
சூப்பர்வைசர் (பெண்)        290
மேலாளர் (சிவில்)        1
துணை மேலாளர்            3
மேலாளர் (எலக்ட்ரிக்கல்)        1
லேபர் வெல்ஃபர் ஆபீசர்        2
சீனியர் சயின்ட்டிபிக் அசிஸ்டென்ட்        1
துணை விஜிலன்ஸ் ஆபீசர்        1
துணை செக்யூரிட்டி ஆபீசர்        1

வயது வரம்பு:

ஒவ்வொரு பணியிடத்துக்கு ஏற்ப வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பில் தளர்வு அரசு விதிகளின்படி வழங்கப்படும்.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அந்தந்த பதவிகளுக்கு ஏற்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் இதற்கான இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25, 2015.

மேலும் தகவல்களுக்கு www.dsssb.delhigovt.nic.in.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா 558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனம், மத்திய அரசின் நேரடிப் பார்வையில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை நிறுவனம். இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் சேலம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது ‘பிலாய் ஸ்டீல் பிளான்ட்’ கிளையில் அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்), ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) உள்ளிட்ட 558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ எஞ்சினியரிங் பிரிவுகளில் மெட்டலர்ஜி படித்தவர்களுக்கு 195 இடங்களும் எலக்ட்ரிக்கல் படித்தவர்களுக்கு 60 இடங்களும், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கு 106 இடங்களும் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) - 119
ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) - 414
ஆபரேட்டர் கம் டெக்னீஷியன் (பாய்லர் ஆபரேஷன்) - 25

வயது வரம்பு:

1.12.2014 தேதியில் 18 வயது முதல் 28 வயது உடையவர்கள் ‘அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன்’ மற்றும் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கலாம். பாய்லர் ஆபரேட்டர் பணிக்கு 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

அட்டெண்டன்ட் கம் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். ‘ஆபரேட்டர் கம் டெக்னீஷியன்’ பணிக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

28.1.2015 வரை விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் விரிவான விவரங்களுக்கு காண்க: www.sail.co.in.

Tuesday, January 13, 2015

விளையாட்டு வீரர்களுக்கு முதன்மை கணக்காயர் அலவலகத்தில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் ஆடிட்டர், அக்கவுன்டென்ட் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:  குருப் 'சி'

காலியிடங்கள்: 05.

துறைவாரியான காலியிடங்கள்:

கோல்கீப்பர் - 01

டிபெண்ஸ் - 02

பார்வர்டு - 02

அலுவலகம்: சென்னை முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்



பணி: குருப் 'சி'

காலியிடங்கள்: 05

கிரிக்கெட்டில விக்கெட் கீப்பர் - 01

வேகப்பந்து வீச்சாளர் - 01

சுழற்பந்து வீச்சாளர் - 01

கால்பந்தில் பார்வர்டு - 01

டிபெண்டர் - 01.

அலுவலகம்: சென்னை மற்றும் புதுச்சேரியிலுள்ள அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்



பணி:

காலியிடங்கள்: 01

ஷட்டில் பேட்மிண்டன் - 01

அலுவலகம்: முதன்மை வணிக தணிக்கை இயக்குநர் அலுவலகம்:

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டென்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 2 ஆண்டுகளுக்குள் துறைவாரியான தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

வயதுவரம்பு: 18.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி: வீரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ சம்பந்தப்பட்ட விளையாட்டில் பிரிவில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக அளவிலோ, தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பள்ளி அணி சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:

K. Ramachandran,

Senior Accounts Officer (Admn.,),

O/o The Prinicipal Accountant General (A -E),

361, Annasalai, Teynampet, CHENNAI 600 018.



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2015.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.agae.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்

சென்னை: குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு

டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2013 - 14க்கான, குரூப் - 2 ஏ பிரிவில் அடங்கிய, நேர்முகத் தேர்வு அல்லாத, உதவியாளர், நேர்முக உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது.

அந்த 2,508 காலிப் பணியிடங்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, கடந்த மாதம் 29ம் தேதி முதல் நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு முடிந்த பின், மீதமுள்ள காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, இனம், துறை வாரியாக தேர்வாணைய இணையதளத்தில், அன்றே வெளியிடப்படுகிறது.

எனவே, விண்ணப்பதாரர்கள், இனவாரியான மீதமுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை ஆய்வுசெய்ய வேண்டும்.

அவரவர் பிரிவில், காலியிடங்கள் இருந்தால் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் நாளில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மாணவ, மாணவியர் சேர்க்கை(அல்லிநகரம்,குமுளியில்)

தேனி: மதுரை காமராஜ் பல்கலை தொலைதூரக் கல்வி மையத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.சி.ஏ., பி.லிட்., பி.பி.ஏ., மற்றும் எம்.ஏ., எம்.பி.ஏ.,உள்ளிட்ட படிப்புகள், சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள், செய்முறை மற்றும் பல்கலை தேர்வுகள் அனைத்தும் தேனியில் நடைபெறும்.

தேனியில் சேர்க்கைக்கு தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு எதிரே உள்ள கல்வி மையத்திலும், குமுளியில் சேர்க்கைக்கு கோட்டயம் ரோட்டில் உள்ள கல்வி மையத்திலும் தொடர்பு கொள்ளலாம் என திட்ட அலுவலர் நாராயண பிரபு தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு: 99520 12777,80123 12777, 04546 262345.

என்.பி.சி.சி.(NPCC) லிமிடெட் நிறுவன பணி வாய்ப்புகள்

புதுடில்லியிலுள்ள நேஷனல் புராஜெக்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்பரேஷன்(NPCC) லிமிடெட் என்ற மத்திய அரசின் நிறுவனம், பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பொது மேலாளர்(நிதி) - 1 பணியிடம் (அதிகபட்சம் 50 வயது இருக்கலாம்)

இணை பொது மேலாளர்(நிதி) - 2 பணியிடங்கள் (அதிகபட்சம் 48 வயது இருக்கலாம்)

துணை பொது மேலாளர்(நிதி) - 2 பணியிடங்கள் (அதிகபட்சம் 45 வயது இருக்கலாம்)

சீனியர் மேலாளர்(சட்டம்) - 1 பணியிடம் (அதிகபட்சம் 40 வயது இருக்கலாம்)

துணை மேலாளர்(சட்டம்) - 3 பணியிடங்கள் (அதிகபட்சம் 30 வயது இருக்கலாம்)

மேற்கண்ட முதல் 3 பணி நிலைகளுக்கு ஒரே மாதிரியான கல்வித் தகுதியும், அடுத்த 2 பணி நிலைகளுக்கு ஒரே மாதிரியான கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜனவரி 31.

அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பத்தைப் பெறலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் இதர விபரங்களை அறிந்துகொள்ள http://npcc.gov.in/

திருச்சி என்.ஐ.டி. யில் எம்.பி.ஏ. சேர அழைப்பு

என்.ஐ.டி. திருச்சி, 2015-17ம் கல்வியாண்டிற்கான எம்.பி.ஏ. படிப்பை வழங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்படிப்பில் சேர, இளநிலைப் பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களை எடுத்திருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 55% மட்டுமே. மேலும், CAT-2014 தேர்வை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.1,550

SC/ST பிரிவினருக்கு ரூ.1,050 மட்டுமே.

CAT-2014மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் shortlist செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட நபர்கள், குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் கலந்துகொள்ள அழைக்கப்படுவார்கள். திருச்சி, சென்னை, டில்லி, ஐதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில், அவை நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜனவரி 29.

விண்ணப்பத்தின் hardcopy -ஐ தபாலில் பெறும் கடைசித் தேதி - பிப்ரவரி 6.

விரிவான தகவல்களை அறிய http://www.nitt.edu/

Monday, January 12, 2015

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. உள்நாட்டு விமான பொது போக்குவரத்து இயக்குனரகத்தில் துணை இயக்குனர்கள்:

8 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 2, எஸ்சி - 1).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

வயது:

50க்குள்.

தகுதி:

ஏரோநாட்டிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ அல்லது எலக்ட்ரானிக்ஸ்/ இயற்பியல் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம்.

2. புனே கடக்வாஸ்லாவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணை பேராசிரியர்:(அரபிக்)

1 இடம். (பொது).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.

வயது:

45க்குள்.

தகுதி:

55 சதவீத தேர்ச்சியுடன் அரபிக் பாடத்தில் முதுநிலை பட்டம்.

3. புனே கடக்வாஸ்லாவில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணை பேராசிரியர்: (இயற்பியல்)

2 இடங்கள். (பொது - 1, ஒபிசி -1).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9000.

வயது:

45க்குள்.

தகுதி:

இயற்பியல் பாடத்தில் பி.எச்டி., அல்லது 55 சதவீத தேர்ச்சியுடன் இயற்பியல் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டம்.

4. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை நிர்வாக அதிகாரி:

5 இடங்கள். (பொது - 2, எஸ்சி - 1, எஸ்டி - 1, ஒபிசி - 1).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

வயது:

40க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம்.

5. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் முதுநிலை நிர்வாக அதிகாரி:

23 இடங்கள். (பொது - 12, எஸ்சி - 3, எஸ்டி - 2, ஒபிசி - 6).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது:

35க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டம்.

6. உதவி இயக்குநர்கள் நிலை - 2 (பொருளாதார புலனாய்வு):

29 இடங்கள். (பொது - 17, ஒபிசி - 8, எஸ்சி - 2, எஸ்டி - 2).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

பொருளியல் பாடத்தில் எம்.ஏ. பட்டம்.

7. டெல்லி தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள்:

39 இடங்கள். (எஸ்சி - 5, எஸ்டி - 3, ஒபிசி - 10, பொது - 21).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

30க்குள்.

தகுதி:

ஏதேனும் அறிவியல் பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் நாக்பூர் தீயணைப்பு பயிற்சி நிலையத்தில் நிலைய அதிகாரி படிப்பு.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25. இதை ஏதேனும் ஒரு ஸ்டேட் வங்கியில் நெட் பேங்கிங் மூலம் செலுத்தவும். எஸ்சி.,/ எஸ்டி.,/ பெண்கள்/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2015.

கரை சேர்ந்ததா கல்வி?

முதலில் இரண்டு செய்திகள். ஒன்று ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை, உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம் என்கிறது யுனெஸ்கோ. நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் எழுத்தறிவு (கவனிக்க: கல்வியறிவு அல்ல) இல்லாமல் இருப்பதாக அது தெரிவிக்கிறது.

இரண்டு, உயர் கல்வி வழங்குகிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. சமீபத்திய எர்னஸ்ட் - யங் அறிக்கையின்படி நம் நாட்டில் 44,668 கல்வி நிலையங்கள் உயர்கல்வி வழங்குகிறதாம். சீனாவில் 4192 என்றால் அமெரிக்காவிலேயே 6,500 தான் உள்ளதாம்.

சரி, இந்த முரண் நிஜங்களை விவாதிப்பதற்கு முன் இன்னொரு முக்கிய புள்ளிவிவரத்தையும் பார்த்துவிடலாமே!

கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமானச் சந்தையாக இந்தியா இருக்கிறது என்கிறது இன்வெஸ்டர் ரிலேஷன் சொசைட்டி. தொடர்ந்து வருடா வருடம் வேலை வாய்ப்புகள் பெருகும் துறை கல்வித்துறையே என்கிறது இண்டியன் ஜாப் அவுட்லுக் சர்வே.



என் பார்வையில் 2014- ல் கல்வியின் முக்கிய போக்குகள் இவை தான்:

# ஆரம்பக் கல்வி சவலைப்பிள்ளையாய்தான் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இன்ன பிற அரசாங்க, தனியார் மற்றும் அயலார் முயற்சிகள் சில நகர்வுகளை ஏற்படுத்தினலும் வீச்சும் தரமும் இன்னமும் போதுமானதாக இல்லை. அரசாங்கத்திடம் அதிக ஆதாயம் பெறும் கார்ப்பரேட்டுகள் கருணை காண்பித்தால் சி.எஸ்.ஆர் புண்ணியத்திலும் சில மாறுதல்கள் கொண்டு வரலாம்.

# அதே போல ஆசிரியர் பயிற்சிக்கும், கல்வி முறை புதுப்பித்தலுக்கும் இன்னமும் நிறைய முதலீடுகள் தேவை. 2014 ஆம் ஆண்டில் இவை சொல்லிக்கொள்ளும் அளவு நடைபெறவில்லை.

# பள்ளிகளில் தாய்மொழி, கைத்தொழில், விளையாட்டு, கலை, நீதி போதனை போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கணிதமும் அறிவியலும் ஆங்கிலமும் முன்னிறுத்தப்படும் போக்கு வலுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வண்ணம் கிராமங்களிலும் இவை தீவிரமாக வளர்ந்து வருகின்றன.

தனியார் பள்ளி மோகமும் ஆங்கிலம் பற்றிய அச்சமும், பிற்கால வேலைக்கு இவை மட்டும்தான் பயன்படும் என்கிற நுகர்வோர் மன நிலையும் முக்கியமான காரணங்கள்.

# திறன் பற்றாக்குறைதான் இந்தியாவின் பேராபத்து. 130 கோடிகள் கொண்ட மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வேலை பார்க்கக்கூடியவர்கள். திறனற்ற மாணவர்களை உருவாக்கியதால் உலகம் முழுக்க நம் நாட்டவர் சென்று பணியாற்றக் கூடிய அற்புத வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

பொறியியல் மாணவர்களில் வெறும் 17 சதவீதமும், நிர்வாக மாணவர்களில் வெறும் 10 சதவீதமும்தான் வேலைக்குத் தகுதியானவர்கள் என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரத்தை 2014- ல் சி.ஐ.ஐ நிறுவனம் ‘இண்டியா ஸ்கில் ரிப்போர்ட்’ டில் சுடச்சுட வெளியிட்டுள்ளது. கல்வித்துறையைச் சாராமல் திறன் வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என அது சொல்வதைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளில் கைத்தொழில்கள் கற்றுத் தரும் காலம் தான் வருங்காலத்தைக் காப்பாற்றும்.

# கடந்த 20 வருடங்களாக பொறியியல் பட்டதாரிகள் தேவைக்கும் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பொறியியல் பட்டதாரிகள் அந்த வேலை கிடைக்காமல் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிப்பது மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இதுவே நிலை. ஒரு Default Degree அந்தஸ்தை பி.ஈ துறப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு. கலைக் கல்லூரிகளையும் மக்கள் சற்று ஏறெடுத்துப் பார்க்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

# இந்தியாவின் 10 சதவீத மக்களுக்குத்தான் உயர்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உயர்கல்விக்காக இங்கு ஒரு பெரிய சந்தை உருவாகியுள்ளது. பல வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் மெல்ல இங்கு கடை விரிக்கும் போக்கு பெருகியுள்ளது. “மேக் இன் இண்டியா” கல்வித்துறையில் பலமாக வெற்றிப் பெறும் எனத் தோன்றுகிறது. அது இந்தியர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதுதான் என் அவா.

# வெளி நாட்டுக் கல்வி வாங்க விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களும் இங்கு தொடங்கப்படுவதால் அயல் நாட்டு கல்வி அனுபவங்கள் இங்கு கிடைப்பதன் பலன் கல்விக்காக வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

# ஆன்லைன் கல்வி முறை பிரபலமாகி வருகிறது. 2014- ல் மட்டும் இந்தியாவின் பல பெரிய பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் உலகமெங்கும் மாணவர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளன. Coursera போன்ற பன்னாட்டு முயற்சிகள் உலகின் எந்த பல்கலைக்கழக படிப்பையும் உங்கள் மடிக்கணினியில் இலவசமாகத் தருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

எந்த அடிப்படையும் இல்லாமல் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சேர்ந்து படிக்கலாம் எனும் வசதிதான் இதன் வெற்றிக்குக் காரணம். பாரம்பரியக் கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

#பெரியார் மிச்சம் வைத்த சீர்திருத்தத்தைத் தொழில்நுட்பம் செய்து முடிக்கும். சாதி, மத, வர்க்க பேதமின்றி அவர்கள் வசதிக்குக் கல்வி கற்கும் வசதி எல்லோருக்கும் வாய்க்கும் எனத் தோன்றுகிறது. கைப்பேசியில் மொபைல் கல்வி வலைதளங்கள் 2015-ல் பிரபலமாகலாம்.

# இன்றைய பள்ளி மாணவர்கூட “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்கிறார். பத்தாவது டியூஷன் போகும் மாணவர்கள் Khanacademy, Mertitnation வலைதளங்கள் சென்று அதிலும் படிக்கிறார்கள். ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பும் விபரீதமும் உள்ளன.

# பழைய அதிகாரங்கள் இழந்த நிலையில் தன் பங்களிப்பையும் மதிப்பை யும் தக்க வைக்கும் முனைப்புகள்தான் தற்கால ஆசிரியர்களின் சவால்கள்.

# கடைசியாக, இந்தியா இந்த நிலையில் கல்வியை நிர்வகித்தால் 2060-ல்தான் 100 சதவீத எழுத்தறிவு சாத்தியப்படும் என்கிறது யுனெஸ்கோ. மக்கள் தொகை இருந்தும் கல்வி, திறன் வளர்ப்பு மற்றும் வேலைப்பயிற்சியில் நாம் தவறவிட்டால் அதன் அதிர்வுகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் தெறிக்கும்.

தொடர்புக்கு:

gemba.karthikeyan@gmail.com

tks

THE HINDU/tamil