Share

Tuesday, April 26, 2016

வேதியியல் பட்டதாரிகளுக்கு எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் பணி

Image result for cecriகாரைக்குடியில் செயல்பட்டு வரும் Electro Chemical Research மையத்தில் காலியாக உள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant III
பணி: Project Assistant III
பணி: Junior Research Fellow
மொத்த காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் Chemistry, Organic Chemistry, Applied Chemistry, Nanitechnology, Materials Science பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NET, GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Central Electrochemical Research Institute, Karaikudi.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, April 13, 2016

CDAC நிறுவனத்தில் திட்ட பொறியாளர் பணி

அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் வளர்ச்சி மையத்தில் (Centre for Development of Advanced Computing (CDAC) ) காலியாக உள்ள திட்ட பொறியாளர், திட்ட உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Project Engineer

காலியிடங்கள்: 44

பணி:  Project Assistant

காலியிடங்கள்: 02

பணி: Project Manager

காலியிடங்கள்: 01

பணி: Consultant

காலியிடங்கள்: 08

தகுதி: பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் பி.இ, பி,டெக் அல்லது எம்இ, எம்.டெக், சுற்றுச்சூழல் அறிவியல், வளிமண்டலவியல், கடலியல், கெமிக்கல், எம்சிஎஸ், எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி, சிவில். எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ,  மனிதநேயம், கணக்கீட்டு மொழியியல், இலக்கியம், வரலாறு, சமஸ்கிருதம், மராத்தி போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்களில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திரையிடல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in official என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cdac.in/index.aspx?id=job_pune_feb_2016_pe என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, April 11, 2016

ஆர்வத்தைத் தூண்டும் குற்றவியல் துறை படிப்புகள்!

இன்றைய நவீன உலகில் குற்றமில்லா சமூகம் என்ற ஒரு பகுதியோ, இடமோ எங்குமே இல்லை என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் குற்றம் பல்வேறுவிதங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமைகள், ஆட்கடத்தல், நம்பிக்கை மோசடி செய்தல், கிளர்ச்சி செய்தல், கையூட்டு, அதிகார துஷ்பிரயோகம், இணையக்குற்றங்கள், பயங்கரவாதம் என பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களையும் குற்ற நடத்தைகளையும் பற்றி அறியவும், குற்றங்களைத் தடுக்கவும், அவை சார்ந்து துப்பறியவும், குற்றநீதி மற்றும் பாதிக்கப்பட்டோரை காக்கவும் கல்வி முறைப்படுத்துதல் அவசியம். அவ்வகையில் ஓரு சமூகத்தில் கூடிவாழும் மனித இனத்தில், சிலருடைய நடத்தைகள் மட்டும் மாறுபட்டு காணப்படுவதேன் என்று சிந்தித்த சில சமூகவியலாளர்களின் பங்களிப்பே இன்று குற்றவியல் துறையாக வளர்ந்து நிற்கின்றது.

குற்றவியல் துறை கல்விமுறை சார்ந்து இந்தியாவின் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், இளநிலை-முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பு, பட்டயப் படிப்பு, மற்றும் பட்டய மேற்படிப்பு, ஆய்வு முனைவர் படிப்பு எனவும், குற்றவியல் மற்றும் குற்றநீதி அறிவியல், குற்றவியல் மற்றும் காவல் அறிவியல், குற்றவியல் மற்றும் தடய அறிவியல், குற்றவியல் மற்றும் சைபர் சட்டங்கள் எனவும் பயிற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

குற்றவியல்துறை படிப்புகளைப் பற்றி திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றநீதித்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் இ.இனநல பெரியாரிடம் கேட்டோம்:

"தமிழகத்தில் குற்றவியல்துறை சென்னை பல்கலைக்கழகத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பாடமாகவும், ஆய்வு முனைவர் பட்டமாகவும், இப்பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலைப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இதுதவிர, முக்கிய பல பல்கலைக்கழகங்களில் இக்குற்றவியல்துறை தொலைதூரக் கல்வி வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இத்துறையில் குற்றவியல் அடிப்படை கோட்பாடுகள், தண்டனையியல் மற்றும் திருத்துதல் நிர்வாகம், காவல் அறிவியல் மற்றும் புலனாய்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்ற இளம் சிறார்கள் மற்றும் உளவியல்கூறுகள், சைபர் சட்டங்கள்,

குற்றவியல் நடைமுறை சட்டம், தண்டனையியல் சட்டம், சாட்சிய சட்டங்கள், பாதிக்கப்பட்டோரியல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள், தனியார் பாதுகாப்பு மற்றும் தனியார் துப்பறிதல், ஊடகவியல் மேலாண்மை, வங்கி குற்றங்கள் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பல பாடங்கள் வாய்மொழியாகவும், பயிற்சி வாயிலாகவும் கற்றுத் தரப் படுகின்றன. மேலும் நேரடி நிர்வாகப் பயிற்சி முறையில் காவல் நிலையம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம், மத்திய சிறை, அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பாதுகாப்பு மற்றும்

துப்பறிதல் நிறுவங்கள் என பல்வேறு துறைகளுக்கும் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்களைச் சிறந்த முறையில் தயார் செய்துகொள்ள முடிகிறது. இத்துறையில் பயின்று கல்வியை நிறைவு செய்யும் மாணவ மாணவியர்களுக்கு அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் மேலும் தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறை போன்றவற்றில் சுய வேலைவாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளவும் வழிவகை உள்ளது.

உதாரணமாக, அரசுத் துறையில் TNPSC GROUP I  மற்றும் Group II தேர்வுகளில் Dy.Superintendent of Police (DSP), ஜெயிலர், தடய அறிவியல் (Forensic Science) பணி போன்ற பதவிகளில் குற்றவியல் துறை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) பணியிலும், நீதிதுறையில் அலுவலக பணிகளிலும் குற்றவியல் துறை மாணவர்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களில் மேல்நிலை பதவிகளிலும், அந்நிறுவனங்களை தாங்களே நிறுவுதலிலும் முக்கியத்

துவம் பெறுகின்றனர். இன்றைய முக்கிய தேவையான தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறிதல் துறையிலும் (Private Security and Detective), ஊடகத்துறையின் குற்றப் பின்னணி தொடர்களிலும் (Crime Investigation Serials), வழிகாட்டுதல் மையங்களில் ஆலோசனை வழங்குதலிலும் (Counselling and Guidance) பல முக்கிய பொறுப்புகளை இத்துறையில் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர்.

இத்துறையின் தனிச்சிறப்பாக இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில காவல்துறைக்கான காவல் பல்கலைக்கழகங்களை தத்தம் மாநிலங்களில் நிறுவி வருகின்றன. அவ்வாறு நிறுவப்படும் பல்கலைக்கழகங்களில் குற்றவியல்துறை முதன்மை பெறுகிறது. இதுவரை இராஜஸ்தான் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் "சர்தார் பட்டேல்' பெயரிலும், குஜராத் மாநில காவல்துறைக்கான பல்கலைக்கழகம் "ரக்ஸ சக்தி' என்ற பெயரிலும் நிறுவப்பட்டுள்ளன. கேரள மாநில காவல் துறைக்கான பல்கலைக்கழகம் தற்சமயம் கட்டப்பட்டு வருகின்றது. தமிழக காவல் துறைக்கான பல்கலைக்கழகம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.

குற்றங்கள் பெருகிவரும் இச்சூழ்நிலையில் இக்குற்றவியல் துறையின் பயன்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. இத்துறையில் சேர்ந்து பயில்வதற்கு அடிப்படைத் தகுதி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருத்தல் ஆகும். அறிவியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தடய அறிவியல் துறையில் தங்களை சிறப்புற்றவராக ஆக்க இது ஏதுவாக இருக்கும்'' என்றார்.