Share

Wednesday, December 31, 2014

ஐ.ஐ.எஸ்.இ.ஆர். வழங்கும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனம்(IISER), ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பில் சேர, மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இக்கல்வி நிறுவனம், மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் வரக்கூடிய ஒரு தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம்.
உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது.
இப்படிப்பில் சேர, சம்பந்தப்பட்ட பிரிவுகளில், இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருப்பதோடு, குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல் துறை ஆராய்ச்சியில் இணைய விரும்புவோருக்கு மட்டும், JEST - 2015 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோர், ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - ஜனவரி 24, 2015.
விரிவான தகவல்களுக்கு www.iisertvm.in/iphd/

0 கருத்துரைகள்: